News July 24, 2024

மண்புழு உரம், தென்னங்கன்றுகள் விநியோகம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடியை ஊக்கப்படுத்தவும் பயிர் வளர்ச்சிக்கு அனைத்து சத்துக்களும் பெற்று விவசாயம் செய்யவும் மண்புழு உரங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதை தி.மலை அரசு கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவிற்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அன்பரசு நேற்று தெரிவித்துள்ளார்.

Similar News

News March 7, 2026

தி.மலை: பண்ணை வைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

தி.மலை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

தி.மலையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!