News July 24, 2024
நிபா வைரஸ்: நீலகிரி எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பரவி 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை சார்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவை இருக்கிறதா என பரிசோதனை செய்து, எந்தவொரு உடல் உபாதைகளும் இல்லாத பட்சத்தில் தான் மாவட்டத்திற்குள் அனுமதி வழங்கப்படுகின்றது.
Similar News
News March 6, 2026
நீலகிரியில் உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

நீலகிரி மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!
News March 6, 2026
நீலகிரி மாவட்டத்திற்கு மழை வாய்ப்பு!

தமிழக வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாறுபட்ட வானிலை மாற்றத்தை வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
News March 6, 2026
குன்னூர்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர் மரணம்

அருவங்காடு பகுதியைச் சார்ந்த, குன்னூர் தனியார் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவர் புகழ் இன்று மாலை பள்ளி முடிந்து வரும் வழியில் மரணம் அடைந்துள்ளார் தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.


