News July 24, 2024
பட்ஜெட் மீது விவசாயிகள் அதிருப்தி

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மிக குறைந்த தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 70% மக்கள் வேளாண்மையை சார்ந்து இருப்பதாகவும், 59% மக்களுக்கு வேளாண்துறை வேலைவாய்ப்பு வழங்கி வருவதாகவும் கூறும் அவர்கள், பட்ஜெட்டில் 1.52 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதாக அதிருப்தியில் இருக்கின்றனர். மொத்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2.78%ஆக உள்ளது.
Similar News
News March 10, 2026
மீண்டும் திமுக கூட்டணியில் பஞ்சாயத்து

திமுக கூட்டணியில் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பிரச்னை வெடித்துள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு தற்போது 4 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாம். இதனையடுத்து, அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, கடைசி நேரத்தில் கூட்டணி கூட மாறலாம் என கூறப்படுகிறது.
News March 10, 2026
விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது www.agrimachinery.nic.in -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாநில வேளாண்மைத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் & சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தகுதி பெற்றால் Mobile No.-க்கு SMS வரும். SHARE.
News March 10, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? அண்ணாமலை கூறினார்

தவெகவுடன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் உடனான கூட்டணி பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே இல்லை என விளக்கம் அளித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக, AP DCM பவன் கல்யாண் மூலமாக NDA தரப்பு விஜய்யுடன் பேசி வருவதாக நேற்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


