News July 23, 2024
குமரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

வரும் 25ஆம் தேதி குமரி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். அதன்படி அருவிக்கரை, அயக்கோடு , ஊராட்சிகளுக்கு மாத்தூர் நலக்கூடத்திலும் மாங்காடு, முஞ்சிறை, வாவறை ஊராட்சிகளுக்கு மாங்காடு நலக்கூடத்திலும் ஞாலம், தடிக்காரன்கோணம், அருமநல்லூர் ஊராட்சிகளுக்கு அந்தரபுரம் நலக்கூடத்திலும் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
BREAKING: குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.9) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதற்கு ஏற்ப உங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது. இதேபோல் குமரி மாவட்டத்திற்கு நவ.12, 13 அன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT
News November 9, 2025
குமரி: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது.5 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வுக்காக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
குமரி: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் நேசமணி(62). 2020-ம் ஆண்டு இவர் அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சுந்தரய்யா, நேசமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


