News July 23, 2024

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

image

புதுச்சேரி மாநில கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் கலைப்பண்பாட்டு துறை மற்றும் ஆரோவில் அறக்கட்டளை ஆகியவற்றின் இடையே புரிந்து ஒப்பந்தம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் அரசு செயலர் நெடுஞ்செழியன் ஆரோவில் அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு அதிகாரி வஞ்சுளவள்ளி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Similar News

News August 14, 2025

ரெஸ்டோபார்களையும் மூட வேண்டும்; ராமதாஸ் அறிக்கை

image

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மிஷன் வீதியில் உள்ள ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, மற்றொருவர் படுகாயம் அடைந்திருப்பதும் வருத்தத்திற்குரியது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புனிதத் தன்மை, கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டுமெனில் அனைத்து ரெஸ்டோ பார்களை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

புதுச்சேரி வாகனங்கள் டில்லி செல்ல தடை!

image

“தேசிய தலைநகரான டில்லி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்த காற்று தர மேலாண்மை அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்து போக்குவரத்து மற்றும் வணிக பொருட்களை ஏற்றிச் செல்லும் பழைய வாகனங்கள் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் டில்லிக்குள் நுழைய, கட்டாயமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.” என்று புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

புதுவைகள் சுகாதார பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மகப்பேறு உதவியாளர், மருந்தாளுநர், இசிஜி தொழில்நுட்ப வல்லுநர், அறுவை சிகிச்சை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்விற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!