News July 22, 2024
அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உடன் இருந்தார்.
Similar News
News September 12, 2025
ராணிப்பேட்டை: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% மற்றும் பிற பிரிவினர் 5% செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <
News September 12, 2025
அம்பேத்கர் விருது விண்ணப்பிக்க அழைப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு ரூ.6.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் நேற்று (11.9.2025) முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
News September 12, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற திருத்தங்கள் செய்ய நாளை (செப்.13) அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். (SHARE)