News July 22, 2024

தடகள வீரர்கள் முதல்வரிடம் கோரிக்கை மனு

image

புதுச்சேரி மாநிலத்தில், விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது பயிற்சியாளர்களில், 28 பேரை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனையர், 100க்கும் மேற்பட்டோர் நேற்று முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பயிற்சியாளர்களுக்கு பணி நிரந்தரம் தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தனர்.

Similar News

News August 14, 2025

புதுவைகள் சுகாதார பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மகப்பேறு உதவியாளர், மருந்தாளுநர், இசிஜி தொழில்நுட்ப வல்லுநர், அறுவை சிகிச்சை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 13ம் தேதி நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட இத்தேர்விற்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

புதுவை: மசாலா பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

image

புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுவையை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஊறுகாய் வகை, வத்தல் வகை, அப்பளம் வகை, மாசாலா பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 88704 97520, 0413-2246500 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

News August 14, 2025

புதுவை: இளநிலை மருத்துவ படிப்பு இறுதி தரவரிசை வெளியீடு

image

புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இளநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தேசிய சுயநிதி ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு இடங்களுக்கான இறுதி தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், என்.ஆர்.ஐ. ஒதுக்கீடு வீரர்கள் 3 அசல் ஆவணங்களுடன் சென்டாக் அலுவலகம் வரவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!