News July 21, 2024

மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கணவர் இல்லாத, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், முதிர் கன்னிகள், கிராம, நகர் புறத்தில் வாழும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம். இந்த இணையதளம் மூலம் ஒய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுயதொழில் மானியம் போன்ற உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.

Similar News

News November 8, 2025

தேனி: ஆற்றங்கரையில் முதியவர் உடல் மீட்பு.!

image

சின்னமனூர் அருகே எல்லப்பட்டி பகுதியில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றங்கரையில் நேற்று (நவ.7) முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் கம்பம் பகுதியை சேர்ந்த மாயாண்டி (75) என்பதும், இவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

News November 8, 2025

தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 8, 2025

தேனி: இளைஞர் தற்கொலை

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (34). இதனால் குடிப்பழக்கத்திற்கு சசிகுமார் அடிமையாகி உள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றார். இந்நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.7) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!