News July 20, 2024

DC-யில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற்றம்?

image

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்க, அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த IPL தொடரில் டெல்லி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ரிஷப்-ஐ விடுவித்து, அவருக்கு பதில் வேறு ஒருவரை எடுக்க DC நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை டெல்லி விடுவித்தால், அவரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News November 28, 2025

திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

image

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையம் ஒன்றியம் கல்வராயன் மலை, கிராங்காடு திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் கடந்த 22ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உறவினர் ராஜமாணிக்கம், ஜெயக்கொடி, பழனிசாமி மற்றும் குழந்தைவேல் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 28, 2025

DKS-ஐ மறைமுகமாக தாக்கிய சித்தராமையா

image

தன்னை CM ஆக்க <<18401800>>காங்., வாக்கு கொடுத்தது<<>> என்பதுபோல பதிவிட்டு பிறகு அதை நீக்கியிருந்தார் டி.கே.சிவக்குமார். இந்நிலையில், கர்நாடகா மக்கள் கொடுத்த பொறுப்பு 5 ஆண்டுகளுக்கானது எனவும், காங்.,ம் தானும் அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி வருவதாகவும் சித்தராமையா X-ல் பதிவிட்டிருக்கிறார். மேலும், கர்நாடகாவுக்கு காங்., கொடுத்தது வெறும் வாக்கு அல்ல, அது இந்த உலகத்தை விட பெரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

சருமம் பளிச்சிட உதவும் மாதுளை தேநீர்!

image

சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க, ரத்த சர்க்கரை அளவு குறைய, மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாத பிரச்னைகளுக்கு இந்த மாதுளை தேநீர் உதவும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலர்ந்த மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடியாக்கி நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இவற்றை வடிகட்டி, அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்தால், சுவையான மாதுளை தேநீர் ரெடி. SHARE IT.

error: Content is protected !!