News July 20, 2024
பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

அமராவதி அணையின் நீர் மட்டம் 84.20 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் உயரம் 90 அடி. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
ரூ 46 லட்சம் மோசடி தம்பதியினர் மீது வழக்கு பதிவு

மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோர்ந்த சண்முகசுந்தரம் (40) மனைவி சசிகலா(38) தம்பதியினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று அதற்கு வட்டி கட்டவில்லை. இதில் நிதி நிறுவனம் மேலாளர் வீரமணி (39) வட்டியோடு சேர்த்து ரூ 46.21 லட்சம் கட்ட வேண்டும் அதற்கு தம்பதியினர் செலுத்த முடியாது என தெரிவித்தனர். இது குறித்து கரூர் டவுன் போலீசில் மேலாளர் அளித்த புகாரின் பேரில் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News April 21, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக முருகன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 21, 2025
கரூர்: கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் காலபைரவர்

கரூர்: தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.