News July 20, 2024

பேருந்து நிலையத்தில் குடிமகன் அட்டகாசம்

image

உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் பழனி பேருந்துகள் இருக்கும் இடத்தில் மதுப்பிரியர் ஒருவர் நேற்று மாலை சுமார் 20 நிமிடத்திற்கு மேல் அப்பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதில் டயர்டு ஆன மதுப்பிரியர் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து காவலர் தண்ணீரை ஊற்றி அவரை அப்புறப்படுத்தினர்.

Similar News

News August 17, 2025

திருப்பூரில் அரசு வேலை: நல்ல சம்பளம் APPLY NOW!

image

திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 67 செவிலியர் பணியிடங்கள், மாவட்ட நலச்சங்கம் மூலம் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நாளை (ஆக.18) மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.<> இங்கே கிளிக் செய்து<<>> விபரங்கள் மற்றும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 17, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரிடம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தியாகு என்பவர் பாலியல் ரீதியாக துன்பறுத்தி, வெளியே சொல்ல கூடாது என சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். புகாரின் பேரில் தியாகு (24) அவரது மனைவி ரஞ்சிதா (22) அவரது தாய் மற்றும் ஜெயந்தி (45) ஆகியோர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

News August 17, 2025

குறைந்த விலையில் மல்பெரி மரக்கன்றுகள் வேண்டுமா?

image

திருப்பூர் விவசாயிகளே பட்டு வளர்ச்சித் துறையின் அரசுப் பண்ணைகளில் மல்பெரி மரக்கன்றுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. உடுமலைப்பேட்டையில் உள்ள “பார்மர்ஸ் டிரைனிங் சென்டர்” – மைவாடி-யில், இருப்பு வைக்கப்பட்டுள்ள 25,000 V1 ரக மல்பெரி கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், அதிகாரி கண்ணன் அவர்களை 87786 97224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!