News July 18, 2024
காவலர் குடும்பத்திற்கு நிவாரணம்

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையில் பணிபுரிந்த காவலர் சங்கர பாண்டியன்
கடந்த ஆண்டு ஜூலை 1ல் தெப்பக்குளத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். காவலரின் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் (Tamil Nadu Police 2011 batch) மூலம் திரட்டப்பட்ட நிவாரண உதவி தொகை ரூ. 25,86,750-க்கான காசோலையை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவரது குடும்பத்தினரிடம் இன்று வழங்கினார்.
Similar News
News September 1, 2025
மதுரை – பரவூணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளையொட்டி, தெற்கு ரயில்வே மதுரை-பரவூணி சிறப்பு ரயில்களை (06059/06060) இயக்குகிறது. செப்.10 முதல் நவ.29ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள், மதுரையில் இரவு 8.40 மணிக்கும், பரவூணியில் இரவு 11:00 மணிக்கும் புறப்படும். 16 ஏசி 2 பொதுபெட்டிகள் கொண்ட இந்த ரயில் தின்டுக்கல், சேலம், விஜயவாடா, புவனேஸ்வர், ஹௌரா உள்ளிட்ட முக்கிய நிறுத்தங்கள் உள்ளன.
News August 31, 2025
BREAKING: மதுரை வரதட்சணை கொடுமை பெண் தற்கொலை

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை. 300 சவரன் நகையை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்டதாக தெரிவித்து பெண்ணை வரதட்சனை கொடுமை செய்ததாக கூறி, பெண்ணின் உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்தனர். இதுகுறித்து கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News August 31, 2025
மதுரை மக்களே; பத்திரப்பதிவு இனி சுலபம்!

மதுரை மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <