News July 18, 2024
தேர்தல் முடிவு குறித்து விஜயபிரபாகரன் மனு தாக்கல்

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு எதிராக, தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு வழக்கு தாக்கல் செய்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது 2 மணிநேரம் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திருப்தி இல்லையென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News October 15, 2025
போட்டோகிராபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சேத்தூர் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன்(55). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் முருகேசன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வீடியோ எடுக்கச் சென்ற போது 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து, இதுகுறித்து வெளியே கூற கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News October 14, 2025
விருதுநகர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 14, 2025
விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் அக். 17ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.