News July 18, 2024

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் பெருமிதம்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (ஜூலை 18) நடைபெற்ற மக்கள் முதல்வன் திட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் சிவா கலந்து கொண்டார். அப்போது, “பல ஆண்டுகளாக மக்கள் மட்டுமே அரசு அதிகாரிகளை தேடி நகரங்களுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது திராவிட மாடல் ஆட்சி வந்த பின், அரசு அதிகாரிகள் மக்களைத் தேடி சென்று அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்குகிறார்கள்” என பெருமிதமாக கூறினார்.

Similar News

News August 25, 2025

விழுப்புரம்: துப்பாக்கி சுடுதல் போட்டி

image

விழுப்புரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தனியார் கல்லூரி பின்புறத்தில் வருகின்ற ஆகஸ்ட்.30ம் தேதி, 1ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வை விழுப்புரம் மாவட்ட துப்பாக்கி பயிற்சி விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

News August 25, 2025

விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 25, 2025

விழுப்புரம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

image

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது, இருக்கை பட்டையை (சீட் பெல்ட்) கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது விபத்துக்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!