News July 18, 2024

பாதுகாவலர்களை மாற்றிய சீமான்?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவித பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இனி மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்வதில்லை என்று அவர் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தனது பாதுகாப்பு பணியில் இருந்த நபர்களை மாற்றி விட்டு, புதியவர்களை அவர் நியமித்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News November 26, 2025

போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

image

கொடுக்கன்குப்பத்தில் மேல்மலையனூர் எஸ்.ஐ வினதா தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஆலமரத்தடியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாரதியார்,ஸ்ரீதர்,சுரேஷ் பார்த்திபன்,லோகநாதன் ஆகியோர் கஞ்சா,போதை மாத்திரைகள் விற்பவர்கள் என தெரியவந்த நிலையில் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 கிராம்,கஞ்சா 7 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

News November 26, 2025

சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

image

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.

News November 26, 2025

விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.

error: Content is protected !!