News July 17, 2024

விலை உயர்ந்த மதுரை மல்லிகை

image

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஆடி மாத பிறப்பையொட்டி ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரூ.400க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப் பூ இன்று ஒரே நாளில் 200 ரூபாய் விலை உயர்ந்து ரூ.600க்கு விற்பனையாகி வருகிறது. பிச்சிப் பூ ரூ.500, முல்லைப் பூ ரூ.300, செவ்வந்தி ரூ.120, ரோஜா ரூ.120, அரளி ரூ.150, சம்பங்கி ரூ.100க்கும் விற்பனையாகிறது.

Similar News

News September 3, 2025

மதுரை மக்களே உஷார்! காவல்துறை எச்சரிக்கை!

image

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: AI குரல் குளோனிங் மோசடி குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மோசடிகள் நெருங்கியவர்களின் குரலை AI மூலம் பின்பற்றி அவசர நிலை உருவாக்கி பணம் கேட்கலாம். உறவினர்களிடம் நேரடியாக உறுதி செய்ய வேண்டும். தொலைபேசி குரல் மட்டும் நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம். புகார் அளிக்க 1930 அழையுங்கள் அல்லது cybercrime.gov.in செல்லவும். *ஷேர் பண்ணுங்க

News September 3, 2025

மதுரை ஆண் கருத்தடை சிகிச்சை முகாம்

image

இந்திய குடும்ப நலச் சங்கம் மற்றும் மாவட்ட குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும், ஆண்கள் கருத்தடை சிகிச்சை முகாம் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை எல்லிஸ் நகரில் அமைந்துள்ள FPAI மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது, இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், கருத்தடை சிகிச்சை மேற்கொள்வோர் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, மேலும் விவரங்களுக்கு 0452 2601905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 3, 2025

மூன்றாம் தரப்பு ஆப்கள் தவிர்க்கவும் – மதுரை காவல் துறை

image

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: மொபைல் மூலம் வங்கி தொடர்பான பண பரிவர்த்தனைகள் செய்யும்போது, உரிய வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மூன்றாம் தரப்பு (third-party) ஆப்கள் மூலம் பணம் செலுத்துவது மோசடிக்கு வழிவகுக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். சந்தேகம் ஏற்பட்டால் 1930 அழைத்து புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!