News July 17, 2024
அரசு தட்டச்சு தேர்வு மையங்கள் அறிவிப்பு

அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆகஸ்ட் மாதம் நடத்தும் தட்டச்சு வணிகவியல் தேர்வுக்கான நெல்லை மண்டல மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாழையூத்து சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக், சேரன்மகாதேவி எஃப் எக்ஸ் கல்லூரி, செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக், பாவூர்சத்திரம் எம்.கே.வி. பள்ளி ஆகிய 4 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வில், சுமார் 10,000 பேர் தட்டச்சு தேர்வு எழுத உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 13, 2025
நெல்லை மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
நெல்லை:பாலத்தில் தூங்குபவர்களை தடுக்க முயற்சி

திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக திருவள்ளுவர் இரண்டு அடுக்கு மேம்பாலம் உள்ளது. கீழ்பாலத்தில் உள்ள சுவர் விளிம்புகளில் பலர் ஆபத்தை உணராமல் படுத்து தூங்குகின்றனர். இதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
நெல்லை: மண்டகப்படி நிர்வாகி தற்கொலை

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருமலை நம்பி கோயில் மலையடிப்புதூர் மண்டகப்படி விழா குழு நிர்வாகியாக உள்ளார். இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.