News July 17, 2024
கதை கேட்கும் பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி காத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படங்களில் நடித்து முடித்துவிட்டார். தமிழ், மலையாளத்தில் கதைகளைக் கேட்ட அவருக்கு, ‘குட் நைட்’ இயக்குநர் விநாயக் சொன்ன ஒன் லைன் பிடித்து போனதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக முழு ஸ்க்ரிப்ட்டையும் கொடுக்க முடியுமா என அவர் கேட்டுள்ளாராம்.
Similar News
News November 24, 2025
சென்னையில் எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?

உலகளவில் நகர்ப்புற மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அதன்படி, 2024-2025-ம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 24, 2025
டிச.1-ல் குரூப்-1 முதன்மை தேர்வு தொடக்கம்

குரூப்-1 முதன்மை தேர்வு டிச.1 முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. Prelims-ல் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.tnpscexams.in தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவாக பதிவு செய்யப்படவுள்ளது.
News November 24, 2025
இந்த பொம்மையால் குழந்தைக்கு ஆபத்து.. BIG ALERT!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் டெடி பியர் போன்ற சாஃப்ட் டாய்ஸ்கள் கட்டாயம் இருக்கும். இப்படி நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கித்தரும் பொம்மையால் உங்கள் குழந்தையின் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படலாம். ஆம், சாஃப்ட் டாய்ஸ்களில் உள்ள முடி எளிதில் உதிரக்கூடியவை. அந்த முடி குழந்தைகள் சுவாசிக்கும்போது அவர்களின் உடலுக்குள் போகலாம். இதனால் அவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.


