News July 17, 2024
மீன்கடை ஊழியர் வெட்டிக்கொலை

ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஷால் (23). இவர் நேற்று இரவு அல்லிக்கண்மாய் சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த காதர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரன், விஷாலை அரிவாளால் கழுத்து, தலையில் வெட்டியதில் விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முனீஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 11, 2025
பரமக்குடி அருகே அரசு பஸ் மோதி விபத்து

பரமக்குடி அருகே கமுதக்குடி என்ற இடத்தில் மதுரை 4 வழிச்சாலையில் கருவேல மரங்களை அரைக்கும் இயந்திரத்தை வெங்காளூரை சேர்ந்த ஓட்டுநர் விஜயகுமார் ஊரக்குடிக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற அரசு பேருந்து அந்த வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கருவேலம் மரங்களை அரைக்கும் இயந்திரம் முற்றிலும் சேதமானது.
News September 11, 2025
ராமநாதபுரம்: இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து பரமக்குடி பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை செல்லும். ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மட்டும் பஸ் போக்குவரத்து இருக்கும் என போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.SHARE பண்ணுங்க.
News September 11, 2025
தவில் நாதஸ்வரம் பயிற்சிப்பள்ளி சேர்க்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.