News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெறவுள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 18, 2025

வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வருகின்ற ஆக.23ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் அனைவரும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 94440 94260 APO(S&P), 94440 94258 APO(IB&CB), 94440 94259 APO(IF), 94440 94262APO (M&E) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 17, 2025

கடலூர்: டிகிரி போதும்… LIC நிறுவனத்தில் வேலை

image

கடலூர் மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 17, 2025

புவனகிரி லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம்

image

கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த மல்லிகா என்பவர் காலமானார். இந்நிலையில், அவரது இரு கண்களையும் தானமாக பெற்று புதுவை தனியார் கண் மருத்துவமனைக்கு புவனகிரி அரிமா சங்கம் சார்பில் நேற்று மாலை வழங்கப்பட்டது. மேலும் கண்களை தானமாக வழங்கிய அவருடைய குடும்பத்தாருக்கும் தானம் பெற உதவிய சங்கத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!