News July 17, 2024
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: திருவள்ளூரில் நீதிபதி உத்தரவு

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைதான 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையில் 5 நாட்கள் காவல் முடிந்தவர்களுக்கு பூந்தமல்லி தனி சிறையில் வைத்து, எழும்பூர் நீதிபதி தயாளன் நேற்று (ஜூலை 16) நேரில் வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 11ம் தேதி வரை 10 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Similar News
News September 1, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News September 1, 2025
திருவள்ளூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 29595450 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் நிறைவு நாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
News September 1, 2025
திருவள்ளூர்: சென்னைக்கே தண்ணி தரும் நம்ம ஊரு

திருவள்ளூர், சென்னையின் முக்கிய நீராதரமாக உள்ளது கொசஸ்தலை ஆறு. இதில் சாலா, துண்டு மீன், அலாத்தி, சீடை மீன், மது கெண்ட, கெளுத்தி, இரு கெளுத்தி போன்ற வகை மீன்கள் கிடைக்கின்றன. இதனால் இந்த ஆறு சுமார் 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.3757 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஆறு அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை விட இரண்டு மடங்கு அதிக நீர் பிடிப்பை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.