News July 16, 2024

மகளை கொன்றுவிட்டு கார்பெண்டர் தற்கொலை

image

பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதி மோகன்(32) – பரிமளா(28). உறவினருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் பரிமளா அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகன், தனது மகள் நட்சத்திரா(5) என்பவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு இன்று காலை(ஜூலை 16) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 1, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 1, 2025

திருவள்ளூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 29595450 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் நிறைவு நாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News September 1, 2025

திருவள்ளூர்: சென்னைக்கே தண்ணி தரும் நம்ம ஊரு

image

திருவள்ளூர், சென்னையின் முக்கிய நீராதரமாக உள்ளது கொசஸ்தலை ஆறு. இதில் சாலா, துண்டு மீன், அலாத்தி, சீடை மீன், மது கெண்ட, கெளுத்தி, இரு கெளுத்தி போன்ற வகை மீன்கள் கிடைக்கின்றன. இதனால் இந்த ஆறு சுமார் 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.3757 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஆறு அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை விட இரண்டு மடங்கு அதிக நீர் பிடிப்பை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!