News July 16, 2024

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சியில் ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை, இன்று (ஜூலை 16) அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைளை மனுக்களாக வழங்கினர். இதில், மாவட்ட ஆட்சியர், எம்.பி. தரணிவேந்தன், கூடுதல் ஆட்சியர், சார் ஆட்சியர், ஒன்றிய பெருந்தலைவர், வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

Similar News

News July 9, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜுலை 9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை

image

இன்று (09.07.2025) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி. வெ.ஆறுச்சாமி, தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தூய்மைப் பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.

News July 9, 2025

விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி

image

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ரூ.7.87 கோடி மானிய உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம், செயல்படுத்தப்படுகிறது என வேளாண் துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!