News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

Similar News

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் சண்டையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்!

image

திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் நேற்று (ஜூலை 10) சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த சண்டையை தடுக்க சென்ற ரமேஷ் என்பவரையும் விஜய் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் விஜய் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 11, 2025

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!