News July 15, 2024

ஒரு பாடத்திற்கு தினமும் 300 பேர் வீதம் அழைப்பு

image

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நெல்லையில் தற்போது நடைபெறுகிறது. மாநில அளவில் சில பாடங்களுக்கு 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக காலதாமதத்தை தவிர்க்க தினமும் ஒரு பாடத்திற்கு 300 ஆசிரியர்கள் வீதம் ஐந்து பாடத்திற்கும் மாநில அளவில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுவதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Similar News

News November 13, 2025

நெல்லை மாவட்டத்திற்கு தேசிய விருது

image

2024ம் ஆண்டிற்கான 6வது தேசிய தண்ணீர் விருதுக்காக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நீர் மேலாண்மை தொடர்பான பணிகளை ஆய்வு செய்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்படுகிறது. வருகிற 18ம் தேதி இந்த விருதை மாவட்ட ஆட்சியர் பெறுகிறார்.

News November 13, 2025

நெல்லை: கர்ப்ப கால நிதி ரூ.18,000 பெறுவது எப்படி?

image

நெல்லை மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <>கிளிக்<<>> செய்து சுயகர்ப்ப பதிவை தேர்ந்தெடுத்து
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News November 13, 2025

நெல்லை: வேன் கவிழ்ந்து விபத்து; இருவர் பலி

image

இன்று கன்னியாகுமரி சென்று விட்டு பாட்டபத்து பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று நாங்குநேரி அருகே வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!