News July 15, 2024
இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். காட்பாடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இதனால் தான் அதிமுக போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு தோல்வி பயம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். எம்.பி. தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியில் அதிமுகவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன” என்றார்.
Similar News
News August 25, 2025
விழுப்புரம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது, இருக்கை பட்டையை (சீட் பெல்ட்) கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது விபத்துக்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
செஞ்சி: புதிய அரசு தொழிற்பயிற்சி தொடக்க விழா

செஞ்சி விழுப்புரம் சாலையில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த இவ்விழாவில், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் மேல்மலையனூர் சேர்மன் நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
News August 25, 2025
விழுப்புரம்: GH சரி இல்லையா? ஒரு கால் போதும்…

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511561>>தொடர்ச்சி<<>>