News July 14, 2024
ஆளுநர் தங்கியிருந்த பகுதியில் 200 சவரன் கொள்ளை

விருதுநகரில், ஆளுநர் ரவி தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் 200 சவரன் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்ற அவர், RRநகரில் தங்கியிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராம்கோ சிமெண்ட் நிறுவன துணை மேலாளர்கள் பாலமுருகன், ராமச்சந்திரன் வீடுகளில் நகை திருடப்பட்டுள்ளது. ஆளுநர் தங்கியிருந்த பகுதியிலேயே, நகை கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 23, 2025
நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம்: CM ஸ்டாலின்

துபாய் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் <<18364839>>நமன்ஷ்<<>> சியாலின் உடல் கோவைக்கு கொண்டு வரப்பட்ட காட்சிகளை பார்த்து கண்கலங்கியதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்கு தமிழ்நாடு தனது அஞ்சலியை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் CM கூறியுள்ளார்.
News November 23, 2025
காதுகேளாதோர் ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை சாதனை

டோக்கியோ காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனை மஹித் சந்து, 50மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் பெறும் 4-வது பதக்கம் இது. ஏற்கெனவே, கலப்பு 10மீ பிரிவில் ஒரு தங்கம், 2 தனிநபர் பிரிவுகளில் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
News November 23, 2025
மெட்ரோ திட்டத்தை வைத்து அரசியல்: அண்ணாமலை

கோவை – மெட்ரோ ரயில் திட்டங்களை வைத்து CM ஸ்டாலின் அரசியல் செய்வதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கு 2 முறை வந்த PM மோடியை, CM ஸ்டாலின் இங்கேயே சந்தித்திருக்கலாமே? ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் எந்த ஒரு மாநில மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வழங்காத நிதியை சென்னை மெட்ரோ-2 திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


