News July 14, 2024

சபாநாயகர் உடன் 100 ஆசிரியர்கள் சந்திப்பு

image

நெல்லை மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை இன்று (ஜூலை 14) நெல்லையில் நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் 7 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உட்பட 360க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை எந்த விசாரணையும் இன்றி கட்டாய பணி மாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரினர்.

Similar News

News November 13, 2025

நெல்லை மாவட்டத்திற்கு தேசிய விருது

image

2024ம் ஆண்டிற்கான 6வது தேசிய தண்ணீர் விருதுக்காக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நீர் மேலாண்மை தொடர்பான பணிகளை ஆய்வு செய்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்படுகிறது. வருகிற 18ம் தேதி இந்த விருதை மாவட்ட ஆட்சியர் பெறுகிறார்.

News November 13, 2025

நெல்லை: கர்ப்ப கால நிதி ரூ.18,000 பெறுவது எப்படி?

image

நெல்லை மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <>கிளிக்<<>> செய்து சுயகர்ப்ப பதிவை தேர்ந்தெடுத்து
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News November 13, 2025

நெல்லை: வேன் கவிழ்ந்து விபத்து; இருவர் பலி

image

இன்று கன்னியாகுமரி சென்று விட்டு பாட்டபத்து பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று நாங்குநேரி அருகே வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!