News July 14, 2024

30 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கரூர், நாமக்கல், திருச்சி, தென்காசி, நெல்லை, குமரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், கடலூர், அரியலூர் உள்பட 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Similar News

News November 23, 2025

இந்திய ODI அணிக்கு கேப்டனாகிறாரா கே.எல்.ராகுல்?

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கழுத்து வலியில் இருந்து மீள சுப்மன் கில்லுக்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதால் அணியை ராகுல் வழிநடத்துவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. 3 போட்டிகள் கொண்ட ODI தொடர் வரும் நவ.30-ம் தேதி தொடங்குகிறது.

News November 22, 2025

மெட்ராஸ் HC வாயில்கள் மூடல்.. ஏன் தெரியுமா?

image

மெட்ராஸ் HC-ன் அனைத்து வாயில்களும் நாளை இரவு 8 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் HC கட்டப்பட்டதால் அதன் வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வளாகத்தை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக HC-ன் வாயில்கள் வருடத்தின் ஒரு நாள் மூடப்படுகின்றன. இது நவ. இறுதி வாரத்தில் பின்பற்றப்படுகிறது.

News November 22, 2025

847 பந்துகளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்

image

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 847 பந்துகளில் முடிவுக்கு வந்தது. 1895-ல் நடந்த டெஸ்ட் 911 பந்துகளில் முடிந்தது. அதன்பிறகு, கடந்த 130 ஆண்டுகளில் விரைவாக முடிந்த டெஸ்ட் இதுதான். அதேபோல, குறைந்த நேரத்தில் இங்கி., அணி 2 இன்னிங்ஸ்களையும் முடித்த போட்டியும் இதுதானாம். இங்கி., பேட்ஸ்மென்கள் இந்த டெஸ்டில் 405 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டனர்.

error: Content is protected !!