News July 14, 2024
₹4730 கோடிக்கு மணல் கொள்ளை: RB உதயகுமார்

தமிழகத்தில் ₹4730 கோடி அளவிற்கு மணல் கொள்ளை நடந்துள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் 190 ஹெக்டேரில் 28 இடங்களில் மணல் அள்ள அனுமதி பெறப்பட்டதாகவும், ஆனால், 987 ஹெக்டேரில் மணல் அள்ளப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஐந்து மாவட்டங்களில் முறைகேடாக மணல் அள்ளப்பட்ட சாட்டிலைட் புகைப்படங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 25, 2025
இயக்குநராகும் ஆசையில் கீர்த்தி ஷெட்டி

வா வாத்தியார், ஜீனி, LIK என அடுத்தடுத்து கீர்த்தி ஷெட்டியின் படங்கள் ரிலீஸாகவுள்ளன. இந்நிலையில், தனக்கு இயக்குநர் ஆகும் ஆசை அதிகரித்துக் கொண்டே வருவதாக கீர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால், தான் சினிமாவில் நுழைந்தபோது ஒரு படம் எப்படி தயாராகிறது என்றே தெரியாது எனவும் கூறினார். டைரக்ஷன் சவாலான வேலை என்ற அவர், இந்த சவாலை தனது படங்களின் இயக்குநர்களிடம் தொடர்ந்து கற்று வருகிறேன் என்றார்.
News November 25, 2025
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் Syllabus மாறுகிறது

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 2026 – 2027 கல்வியாண்டு முதல், மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் படிப்படியாக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்றார்போல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 25, 2025
விளையாட்டில் வீறுநடைபோடும் இந்திய சிங்கப்பெண்கள்..

நவம்பர் மாதத்தில், இந்திய வீராங்கனைகள் வெற்றிக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று வருவது, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நவ.2-ல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி தட்டியது. தொடர்ந்து, நவ.23-ல் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி கெத்தாக தனதாக்கியது. அதற்கு அடுத்த நாளே (நவ.24) கபடி மகளிர் உலகக்கோப்பையையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.


