News July 14, 2024

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் சபாநாயகர்

image

ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் நாளை காலை(15.7.2024) தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைக்க உள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News

News September 13, 2025

நெல்லை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (செப்.13) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News September 13, 2025

நெல்லை மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <>இங்கே கிளிக்<<>> செய்து கொள்ளலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். *SHARE*பண்ணுங்க.

News September 13, 2025

நெல்லை:பாலத்தில் தூங்குபவர்களை தடுக்க முயற்சி

image

திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக திருவள்ளுவர் இரண்டு அடுக்கு மேம்பாலம் உள்ளது. கீழ்பாலத்தில் உள்ள சுவர் விளிம்புகளில் பலர் ஆபத்தை உணராமல் படுத்து தூங்குகின்றனர். இதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!