News July 14, 2024
ஆதரவற்ற நிலையில் ரவிஷங்கர் உடல்

‘வருஷமெல்லாம் வசந்தம்’ பட இயக்குநர் ரவிஷங்கர் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. 63 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியின் மறைவை அறிந்து மும்பையிலிருந்து வர முடியாத நிலையில், வயது முதிர்ந்த அக்கா உள்ளார். வெளிநாட்டில் இருந்து இறுதி அஞ்சலி செலுத்த அண்ணன் திரும்பிக்கொண்டிருக்கிறார். கண்ணீர் சிந்த ஆள் இன்றி ஆதரவற்ற நிலையில், அவரது உடல் உள்ளது.
Similar News
News November 23, 2025
₹105 கோடி.. தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த ‘ஜனநாயகன்’

‘ஜனநாயகன்’ படத்தின் தியேட்டர் உரிமம், 5 விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் ₹105 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் தியேட்டர் உரிமம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சினிமா வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News November 23, 2025
பிங்க் டால்பின் பற்றி தெரியுமா?

அமேசான் நதியின் ஆழத்தில் நீந்தி திரியும் ஒரு அதிசயம் தான் பிங்க் டால்பின். இது ‘போட்டோ’ என்றும் அழைக்கப்படுகிறது. பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள இவை, வளர வளர பிங்க் நிறமாக மாறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உற்சாகமடையும் போது இவை மேலும் பிரகாசமான பிங்க் நிறமாக மாறுமாம். மற்ற டால்பின்களை விட புத்தியசாலியானது என கூறும் நிபுணர்கள், இவை அழியும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
News November 23, 2025
மீண்டும் அதே தவறை செய்கிறாரா விஜய்?

கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், ஆளுங்கட்சி மீது பழிபோட்டார் என விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சியில் மக்களுடனான சந்திப்பில் கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய விஜய், ’என்னை ஏன் தொட்டோம், என் மக்களை ஏன் தொட்டோம்னு வருந்துவீங்க’ என பேசியிருக்கிறார். இதனால், மீண்டும் PUNCH வசனம் பேசி கரூர் மேட்டரில் ஆளும் தரப்பை அவர் கைகாட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


