News July 13, 2024

கடந்த 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 11 மணி வரை பெய்ததால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கீழச்சேர்வை பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லக்கூர் பகுதியில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Similar News

News August 17, 2025

கடலூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News August 17, 2025

கடலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் வரும் ஆக.19-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பரங்கிப்பேட்டை, பி.முட்லூர், பிச்சாவரம், ஸ்ரீ முஷ்ணம், ஊ.மங்களம், மேலப்பாலையூர், காட்டுமன்னார்கோவில், பழஞ்சநல்லுர், சிறுவரப்பூர், வெள்ளக்கரை, ஓதியடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

கடலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.16) இரவு கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!