News July 12, 2024
விசிகவுக்கு 12 தொகுதிகள் தருவதாக இபிஎஸ் தூது?

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தால் திமுக மீது திருமாவளவன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அவரை அதிமுக கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியை இபிஎஸ் தொடங்கி இருப்பதாகவும், சில தலித் சமூகத் தலைவர்கள் மூலம் அவருடன் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 பொது தொகுதிகள் உள்பட 12 தொகுதிகள் தருவதாக இபிஎஸ் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: காதலித்து ஏமாற்றிய நபர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி: அரியலூரை சேர்ந்த மகேஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமாரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் இருந்த பிரவீன்குமார், தற்போது திருமணம் செய்து கொள்ள கேட்டபோது மகேஸ்வரியை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பிரவீன் குமார் மீது நேற்று (நவ.21) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 21, 2025
போலி ORS கலவைகளை உடனே அகற்ற FSSAI உத்தரவு

‘ORS’ என்று தவறாக விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்களை உடனடியாக விற்பனையில் இருந்து அகற்ற மாநிலங்களுக்கு, FSSAI உத்தரவிட்டுள்ளது. உண்மையான ORS என்பது வயிற்றுப்போக்கு நோய்களின் போது நீரிழப்பை தடுக்கும் WHO பரிந்துரைத்த மருந்து. எனவே, WHO அங்கீகாரம் பெற்ற ORS கலவைகளை மட்டுமே விற்க வேண்டும் எனக்கூறியுள்ள FSSAI, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
News November 21, 2025
தமிழக விரோத நிலைப்பாட்டில் பாஜக: திருமாவளவன்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்புக்கு BJP-ன் தமிழக விரோத நிலைப்பாடே காரணம் என்று திருமாவளவன் சாடியுள்ளார். 2011 மக்கள் தொகை விவரங்களை காட்டி திட்டத்தை நிராகரிப்பது சரியானது அல்ல என்றும், அங்கு கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். BJP ஆளும் மாநிலங்களில் சிறிய ஊர்களுக்கு கூட மெட்ரோ ரயில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


