News July 12, 2024
ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.3.75 லட்சம் மோசடி

குமரி சிதறால் பகுதியை சேர்ந்த சுரேஷ்(45), புன்னை நகர் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறார். இவர், கொல்லங்கோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி தினேஷ் குமாரிடம்(62), அவரது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3,75,000 பெற்றுள்ளார். ஆனால் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் தராமல் மோசடி செய்ததாக புகார் அளித்ததன்பேரில் நேசமணி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 20, 2025
குமரி: கூட்டு பட்டாவை, தனி பட்டாவாக மாற்றனுமா? SIMPLE..!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற<
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 20) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.61 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.30 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.68 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.79 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 648 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 20, 2025
குமரி: IOB-ல் வேலை.. இன்றே கடைசி! உடனே APPLY

குமரி இளைஞர்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டீஸ் பணிக்கு தமிழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இன்றைக்குள் (ஆக. 20) இந்த <