News July 11, 2024
கத்தாரில் இந்தியர்கள் யுபிஐ பரிவர்த்தனை செய்யலாம்!

கத்தாருக்கு செல்லும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவின் தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) QR குறியீட்டை பயன்படுத்தி வளைகுடா நாடு முழுவதும் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள மிகப்பெரிய நிதி நிறுவனமான QNB உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஏராளமான இந்திய சுற்றுலா பயணிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
FLASH: பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

இன்று அதிகாலை பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 135 கி.மீ., ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் சந்திக்கும் உலகின் மிகவும் நில அதிர்வுள்ள மண்டலங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சில பகுதிகள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
News November 21, 2025
பிஹார் பாணியில் TN-ல் கூட்டணி ஆட்சி: கிருஷ்ணசாமி

தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் பிஹாரை பார்த்து பாடம் கற்க வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியும், பூரண மதுவிலக்கும் தான் 2026 தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்; ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டினால் தான் விடிவு காலம் பிறக்கும்; கூட்டணி ஆட்சி, மதுவிலக்கு என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சியுடன் தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
தக்காளி, முருங்கை, வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!

சத்தமில்லாமல் சாம்பார் வெங்காயம், தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் உயர்வை கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இம்மாத தொடக்கத்தில் ₹50-க்கு விற்பனையான 1 கிலோ முருங்கை ₹200 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி, சாம்பார் வெங்காயம் 1 கிலோ ₹50 – ₹70-க்கும், மழை காரணமாக வரத்து குறைந்ததால் வரும் நாள்களில் காய்கறிகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.


