News July 11, 2024

பவானிசாகர் அணை நாளை திறப்பு

image

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 2024-25 ஆண்டு முதல் போக பாசனத்திற்கு அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 54 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் ஜூலை 12ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை ஆக,14 கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. தாளவாடி ஒன்றியம்-சமுதாயகூடம்-சிம்டஹல்லி, சத்தியமங்கலம் ஒன்றியம்-காமாட்சி அம்மன் கோவில் மண்டபம்-அரசூர், மொடக்குறிச்சி ஒன்றியம்-கொங்கு மஹால்-முகாசி அனுமன்பள்ளி, சென்னிமலை ஒன்றியம்-தேவி மஹால்-பாலாஜி கார்டன், பவானி ஒன்றியம்-சிவகாமி மஹால்-சூரியம்பாளையம்.

News August 13, 2025

ஈரோட்டில் பதிவு செய்தால்: நஷ்டம் இல்லை APPLY NOW !

image

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப் – 2025 பருவத்தின் பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது. அதற்கு ஹெக்டருக்கு ரூ.300 முதல் பிரீமியத் தொகை செலுத்தி ரூ.30,000 வரை பயிர் இழப்பீடு பெறலாம். மேலும் செப்.16 க்குள் அரசு பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அறிவித்தார்.

News August 13, 2025

திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

image

அந்தியூர் குருநாதசாமி ஆடித் தேர் திருவிழா இன்று தொடங்கியது. திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார். தொடர்ந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். குதிரை சந்தையும் பார்வையிட்டார். அவருக்கு அஇஅதிமுகவின் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!