News July 11, 2024

‘தமிழ்நாடு நாள்’ – முதல் இடம் பிடித்த மாணவனுக்கு ரூ.10,000

image

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ‘தமிழ்நாடு நாள்’ முன்னிட்டு இன்று(ஜூலை 11) திருவாரூரில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற பேரளம் அரசு பள்ளி மாணவர் ச.கெள.பாவேஷ்பிரசன்னாவுக்கு தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கஜலெட்சுமி ரூ.10,000 பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார். மாணவர் பாவேஷ்பிரசன்னா மாநில அளவில் நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Similar News

News September 10, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 10, 2025

திருவாரூர் பள்ளிகளில் தொடங்கிய காலாண்டு தேர்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலாண்டு தேர்வு தொடங்கியது. மாநில பள்ளி கல்வித் துறையின் அட்டவணை படி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கி 25-ம் தேதி வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

News September 10, 2025

திருவாரூர்: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!