News July 11, 2024
இதை செய்து தேவையில்லாத சிம்மை துண்டிக்கலாம்

புதிய தொலைத் தொடர்பு சட்டத்தில் ஒருவர் பெயரில் 9 சிம்கார்டுக்கு மேல் இருந்தால் ₹50,000- ₹2 லட்சம் அபராதம், வேறு ஒருவர் பெயரில் சிம்கார்டு பயன்படுத்தினால், ₹50 லட்சம் அபராதம், 3 ஆண்டு சிறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலில் இருப்பதால், தேவையில்லாத சிம்மை துண்டிப்பது நல்லது. மொபைலில் இருந்து 198 என்ற எண்ணில் பேசி கோரிக்கை வைத்தால், தேவையில்லாத எண் துண்டிக்கப்பட்டு விடும்.
Similar News
News December 6, 2025
விஜய் கட்சியில் மற்றொரு தலைவர் இணைகிறாரா?

திமுக உடனான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்., தலைமை விரைவில் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், தவெகவில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறையில் சீட் கிடைக்காததற்கு திமுகவின் தலையீடே காரணம் என அதிருப்தியில் இருந்த <<18476742>>பிரவீன்<<>>, சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசினார்.
News December 6, 2025
CINEMA 360°: ஜி.வி.பிரகாஷின் கலக்கல் டைட்டில் லுக்

*நிவின் பாலி நடித்துள்ள ‘பார்மா’ என்ற வெப் தொடர் 7 மொழிகளில் வரும் 19-ம் தேதி வெளியாகிறது. *ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. *மழை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போன அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன்’, படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வருகிறது *பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘ஷோமேன்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
News December 6, 2025
ஓட்டு KAS-க்கு இல்லை, இரட்டை இலைக்கு: செல்லூர் ராஜூ

மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றது தவறு என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தனக்கு எந்த கட்சியும் வேண்டாம், பதவியும் வேண்டாம், MGR கட்சியில் கடைசிவரை இருப்பேன் என சொல்பவன்தான் உண்மையான அதிமுக தொண்டன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் செங்கோட்டையனுக்காக ஓட்டுபோடவில்லை, இரட்டை இலை சின்னத்திற்கே ஓட்டுபோட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.


