News July 11, 2024

ஆர்டிஒ கொலை முயற்சி; இருவர் மீது குண்டாஸ்

image

இலுப்பூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க சென்ற இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி உள்ளிட்டோரை மினி லாரியால் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக அன்னவாசல் பகுதியை சேர்ந்த சுந்தரம், சங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இன்று குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 4, 2025

புதுகை: வாகனம் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே குமரப்பன் வயல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதில் அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் அளித்ததன் பெயரில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து மீமிசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2025

புதுகை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், முதலமைச்சர் எதிர்வரும் 10.11.2025 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News November 4, 2025

புதுகையில் கிராம ஊராட்சி செயலர் வேலை!

image

புதுகையில் மாவட்டத்தில் 83 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> Click<<>> செய்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!