News July 11, 2024
மக்களுடன் முதல்வர் திட்டம்: ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம் பகுதிகளில், தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் எப்படி மக்களிடம் முதல்வர் திட்டம் நடந்ததோ, அதேபோல் முகாமிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதில் முகாமிற்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர், இட வசதி, அரசு துறைகளுக்கு அரங்குகள் அமைத்தல் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
Similar News
News July 10, 2025
நள்ளிரவில் கூரை வீடு தீப்பிடித்து ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு மகன் பிரபு. நேற்று (ஜூலை 9) இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
News July 10, 2025
அறிவியல் புத்தாக்க மானக் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாட்டு நலப்பணித் திட்ட இயக்குனரின் அறிவுறுத்தல் படி மாணவர்களுக்கு உயரிய விருதான அறிவியல் புத்தாக்க மானக் விருதுக்கு வருகின்ற ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு நடுநிலை பள்ளிக்கு மூன்று மாணவர்களும் உயர்நிலைப் பள்ளிக்கு ஐந்து நபர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021208). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க