News July 11, 2024

அடுத்தடுத்து நடைபெறும் குடிபோதை விபத்துகள்

image

மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அர்ச்சனா என்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரை ஒட்டி வந்த தேவ்சந்த் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் போர்ஷே கார் விபத்து, மும்பையில் BMW கார் விபத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது.

Similar News

News November 20, 2025

பிரபல நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

image

தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரதியுஷாவின் மரணம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காதலன் சித்தார்த் உடன் 2002-ல் விஷம் குடித்து அவர் உயிரிழந்தார். ஆனால், காதலன் உயிர்பிழைத்தார். இதுதொடர்பான SC வழக்கில், தான் குற்றமற்றவர் என சித்தார்த் வாதிட்டார். ஆனால், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதே அவர்தான் என பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

News November 20, 2025

கூட்டணி ரூட்டை மாற்றுகிறாரா விஜய்?

image

கொள்கை எதிரி பாஜக உடன் கூட்டணி கிடையாது என கூறிவந்த விஜய், தற்போது NDA கூட்டணியில் இணைவது பற்றி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பிஹார் தேர்தலில் PK-வின் கட்சி மரண அடி வாங்கியதால், நாமும் தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடைவோமோ என விஜய் யோசிக்கிறாராம். ஒருவேளை அதிமுக கூட்டணியில் இணைந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் தவெக வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

News November 20, 2025

மீண்டும் புயல் சின்னம்… கனமழை வெளுக்கப் போகுது!

image

வங்கக் கடலில் நவ.22-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது 2 நாள்களில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் IMD கணித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை அரியலூர், கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமாய் இருங்கள்!

error: Content is protected !!