News July 11, 2024
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம்

தி.மலை மாவட்ட ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் இன்று அமைச்சர் எ.வ.வேலு முகாமை தொடங்கி வைக்கிறார். 15 துறைகளை ஒருங்கிணைத்து 124 இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
தி.மலை: 10th பாஸ் போதும் காவல்துறையில் வேலை

தி.மலை இளைஞர்களே காவல்துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு. தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 22, 2025
தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News August 22, 2025
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்கள் பொது ஏலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகப் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களும், வந்தவாசி உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்திய பழைய ஜீப்புகளும் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் 9.9.2025 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.