News July 10, 2024
காலை 10 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 25% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதாவது, 60,568 நபர்கள் தற்போது வரை வாக்களித்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நடைபெற உள்ளது. மாதம் ரூ.15700-58100 வரை சம்பளம் வழங்கப்படும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களை <
News July 9, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 08.07.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 8, 2025
விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.