News July 9, 2024
உதகை: Ex ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு மானிய நிதி

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நல நிதியில் இருந்து முருகனுக்கு ரூ.4,000, செல்வம் என்பவருடைய மகள் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரம் ஆகிய மானியம் பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் மு.அருணா வழங்கினார். முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் இந்திரகுமார் உடன் இருந்தார்.
Similar News
News January 1, 2026
BREAKING: நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி ஆட்சியர் தெரிவிக்கையில் பறவை காய்ச்சல் நோய்க்கு, சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை என்பதால், கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது, மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
News January 1, 2026
கூடலூரில் சுட்டு தற்கொலை

கூடலுார் புத்துார்வயல் அருகே வடவயல் பகுதியை சேர்ந்தவர் குட்டிகிருஷ்ணன். தனது வீட்டில் தனியாக தங்கி இருந்தார். நேற்று காலை, அவரின் மைத்துனர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, முன் அறை இருக்கையில் நாட்டு துப்பாக்கியுடன் அமர்ந்தபடி முகத்தில்பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என வந்துள்ளது.
News January 1, 2026
நீலகிரியில் இன்று ஒரு நாள் மட்டும் மூடல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான அவலாஞ்சி இன்று (ஜன.01) ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பவானி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற இருப்பதால் அதிகப்படியான உள்ளூர் மக்கள் வர இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என கருதி ஒரு நாள் மட்டும் அவலாஞ்சி சுற்றுலா தளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


