News July 9, 2024

கள்ளச்சாராய விவகாரம்: 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

image

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வழக்கில் 21 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 11 நபர்களை சிபிசிஐடி விசாரித்த நிலையில் தேவிகன், அரிமுத்து, அய்யாசாமி ஆகியோரின் காவல் நேற்றுடன் முடிந்தது. இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த 3 பேரையும் நேற்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் இந்த 3 பேருக்கும் 20 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.

Similar News

News July 10, 2025

நள்ளிரவில் கூரை வீடு தீப்பிடித்து ரூ.3 லட்சம் பொருட்கள் நாசம்

image

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிக்கண்ணு மகன் பிரபு. நேற்று (ஜூலை 9) இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்து வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

News July 10, 2025

அறிவியல் புத்தாக்க மானக் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

நாட்டு நலப்பணித் திட்ட இயக்குனரின் அறிவுறுத்தல் படி மாணவர்களுக்கு உயரிய விருதான அறிவியல் புத்தாக்க மானக் விருதுக்கு வருகின்ற ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு நடுநிலை பள்ளிக்கு மூன்று மாணவர்களும் உயர்நிலைப் பள்ளிக்கு ஐந்து நபர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

பேருந்தில் மீதி சில்லறையை வாங்க வில்லையா? கவலை வேண்டாம்

image

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021208). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!