News July 8, 2024
e-KYC அப்டேட்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சரிபார்ப்பை முடிக்காதவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளிகள் அருகில் உள்ள பொது விநியோக முறை விற்பனையாளர்களிடம் சென்று e-KYC அப்டேட் செய்து கொள்ளலாம்.
Similar News
News September 24, 2025
BREAKING: திமுகவில் இணைந்தார்.. கூட்டணி சர்ச்சை

கரூர் நகர காங்., மகளிர் அணி தலைவர் கவிதாவை திமுகவில் இணைத்தது சர்ச்சையாகியுள்ளது. குறிப்பாக CM ஸ்டாலினின் தலைமை தேவை என உணர்ந்து அவர் கட்சியில் இணைந்ததாக செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளதற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியின் பெயரால் காங்.,-க்கு அவமரியாதை செய்யப்படுவதை ஏற்க முடியாது எனவும் இது கூட்டணிக்குள் கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தும் என்றும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News September 24, 2025
IND Vs PAK மீண்டும் மோதலா?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று புள்ளி பட்டியலில் இந்திய அணி ஒரு வெற்றி, 0.689 ரன் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. 2 தோல்வியை தழுவிய இலங்கை ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் தலா 2 புள்ளிகளுடன் 2-வது, 3-வது இடங்களில் உள்ளன. இன்றைய போட்டியில் வென்றால் இந்தியா பைனலுக்கு முன்னேறிவிடும். எனவே, பாக். தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால், பைனலில் IND Vs PAK மோதும்.
News September 24, 2025
வயிறு உப்புசத்திற்கு எளிதில் தீர்வு!

சாப்பிட்ட பிறகு வயிறு பலூன் போல் ஊதியிருந்தால் அது வயிறு உப்புசம் பிரச்னையாகும். செரிமானம் ஆகாத உணவு, காற்று சேர்வதால் வயிறு உப்பித் தெரியும். இதற்கு 10 பல் பூண்டுடன், கொஞ்சம் கல் உப்பை இடித்து சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நல்லெண்ணெய்யில் வதக்கி, 15 நிமிடத்திற்கு ஒவ்வொன்றாக சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், காற்று நீங்கி வயிறு இயல்பு நிலைக்கு திரும்பும். தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..