News July 8, 2024
பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி!

மதுரை தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 2024-25ஆம் கல்வி ஆண்டின்படி ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு கையடக்க கணினி (TABLET) வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு 2,855 கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார். இதன் மூலம், மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்பிக்க முடியும்.
Similar News
News July 10, 2025
குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்

ஜூலை.12 அன்று காலை 05:50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12666) மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக மதுரை மற்றும் திண்டுக்கல்லை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக திருப்பி விடப்படும். மாற்று நிறுத்தங்கள் அருப்புக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகியவை அடங்கும்.
News July 10, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
அரசு விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு

எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்கள் 15 பேர் இன்று காலை விடுதியில் வழங்கப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி உணவை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ, தாசில்தார், சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.