News July 8, 2024

விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி செய்துள்ளது

image

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி செய்துள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், விழுப்புரத்தில் 60,000 பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. சராசரியாக 1 மாவட்டத்திற்கு 3.05 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், விழுப்புரத்தில் 5இல் 1 பங்கினருக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது” என்றார்.

Similar News

News July 8, 2025

விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்

image

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

விழுப்புரத்தில் பழங்குடி இளைஞர்களுக்கு அரசு வேலை

image

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்ப மாதிரி விண்ணப்பம் மற்றும் மற்ற விபரங்கள் www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2025

News July 8, 2025

விழுப்புரம் புதுச்சேரி ரயில் சேவை ரத்து

image

விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்- புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண் 66063 மற்றும் 66064) திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் ஜூலை 10ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!