News July 7, 2024

நெல்லை மாநகராட்சி நாளை கூடுகிறது

image

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த யார் மேயர் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு மாநகராட்சி கூட்டம் கூடுவதாக ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் தெரிவித்துள்ளார். அக்கூட்டத்தில், மேயர் ராஜினாமா குறித்து கூட்டத்தில் பதிவு செய்யப்படவுள்ளது. இக்கூட்டத்தை பொறுப்பு மேயராக இருக்கும் ராஜு நடத்தவுள்ளார்.

Similar News

News July 10, 2025

நெல்லை: ஆசிரியர் வேலை வேண்டுமா?

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வானது செப்.28ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (நெல்லையில் ஆசிரியர் வேலை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு முடிந்தால் ஒரு SHARE பண்ணுங்க)

News July 10, 2025

நெல்லை: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தாசில்தாரின் பணிகளான சான்றிதழ்கள் (சாதி, குடிமை, குடியிருப்பு, மதிப்பீடு) வழங்குதல், பட்டா மாற்றம், சிட்டா, அடங்கல் பராமரித்தல், அரசு வரிகள் வசூல், தேர்தல் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் இதுவரை ஏதேனும் ஒரு காரணத்திற்காக தாசில்தார் அலுவலகம் சென்றிருப்போம், இவற்றில் ஏதேனும் ஒன்றில் லஞ்சம் தொடர்பான புகார் எழுந்தால் 04622580908 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். பிறரும் பயன் பெற ஷேர் பண்ணுங்க.

News July 10, 2025

செவிலியர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு

image

அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை விடுத்துள்ள அறிக்கை: செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட செவிலியர்கள் விடுப்பு எடுத்து சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!